செய்திகள்
தற்கொலை

ஊட்டியில் வறுமையால் தாய்-மகள் தற்கொலை

Published On 2019-09-12 09:42 GMT   |   Update On 2019-09-12 09:42 GMT
ஊட்டியில் வறுமை காரணமாக மகளை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு தாய் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:

ஊட்டி நொண்டிமேட்டை சேர்ந்தவர் மலர்வண்ணன். இவரது மனைவி நிர்மலா (வயது 25). இவர்களது மகள் ஹரிதா (5).கணவர் இறந்து விட்டதால் நிர்மலா கூலிவேலைக்கு சென்று லவ்டேலில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் மகளை படிக்க வைத்தார்.

மகளை தன்னந்தனியே இருந்து எப்படி வளர்ப்பு என்ற விரக்தியில் இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு நிர்மலா மகளை துப்பட்டாவால் உடலில் கட்டிக்கொண்டு ஊட்டி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காலையில் ஏரியில் அவர்கள் இருவரின் உடல்கள் மிதப்பதை பார்த்து படகு இல்ல ஊழியர்கள் ஊட்டி நகர மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News