செய்திகள்
கைது

தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2019-09-12 08:54 GMT   |   Update On 2019-09-12 08:54 GMT
தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை திருவள்ளுவர் தெரு கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் கோபு (வயது58). இவர் தஞ்சை கீழவாசலில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆபிரகாம் பண்டிதர் சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லையாம்.

இதுகுறித்து அவர் தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தஞ்சை கரந்தையை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (வயது32) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மீனாட்சி சுந்தரத்தை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News