செய்திகள்
தற்கொலை

தக்கலை அருகே வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை

Published On 2019-09-10 09:57 GMT   |   Update On 2019-09-10 09:57 GMT
தக்கலை அருகே வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை:

தக்கலையை அடுத்த காட்டாத்துறை கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அஜீஸ் (வயது 35).

இவர் படித்து முடித்து வேலை தேடிவந்தார். ஆனால் அவரது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மன வேதனையுடன் இருந்து வந்தார். மேலும் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு பெண் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று பத்மநாபபுரத்திற்கு அஜீஸ் சென்றுவிட்டு வீடு திரும்பினார். பின்னர் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீடு திரும்பிய பெற்றோர் இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவம் குறித்து தக்கலை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கடையை அடுத்த கீழ்குளம் குஞ்சாகோடை சேர்ந்தவர் தாசைய்யன் (61). இவரது மகன் ரெதீஸ் (25).

இவர் படித்து முடித்து சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆனால் தனது படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என அவர் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். களியக்காவிளையை அடுத்த அதன்கோடு பகுதியை சேர்ந்தவர் வினோத் (32).இவர் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்தார். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனையுடன் காணப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து களியக்கா விளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News