செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

மதுரவாயல் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

Published On 2019-09-04 06:49 GMT   |   Update On 2019-09-04 06:49 GMT
மதுரவாயல் வீடு புகுந்து திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இன்று அதிகாலை 3 மணி அளவில் இவருடைய வீட்டிற்குள் 2 பேர் புகுந்து அங்கு இருந்த விலை உயர்ந்த செல்போன், டேப்லட் ஆகியவற்றை திருடினர். சத்தம் கேட்டு கண் விழித்த வெங்கடேஷ் கூச்சலிட்டார். அதற்குள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வானகரம் கந்தசாமி நகரைச் சேர்ந்த மணிகண்டன் (24) போரூர் சின்ன பனிச்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற மொட்ட மணி (23) ஆகியோர் சிக்கினார்கள். அவர்களிடம் இருந்து டேப்லட், செல்போன் பறி முதல் செய்யப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News