செய்திகள்
கைது

கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட மோதலில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

Published On 2019-09-03 09:06 GMT   |   Update On 2019-09-03 09:06 GMT
கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட மோதலில் வாலிபரை தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை:

சிலைமானை அடுத்த சாமநத்தம் மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி . இவர் நேற்று அங்குள்ள மந்தைக்கு சென்றார்.

அப்போது மந்தையில் கிரிக்கெட் விளையாடிய சிலருடன் தகராறு ஏற்பட்டது. இதில் முத்துப்பாண்டிக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி விழுந்தது.

இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமநத்தம் மேலத்தெருவைச் சேர்ந்த சித்ருவின் மகன்கள் ஆறுமுகம் (19), ஜெயராமன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே வழக்கில் ஆறுமுகம் புகாரின் பேரில் முத்துப்பாண்டி மற்றும் சகோதரர் ராஜீவ்காந்தி (33) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விரகனூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (23). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் பிரகாஷ் நேற்று மாலை விரகனூர் சாவடி அருகே உறவினருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்த 3 பேர் பிரகாசை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரகாசை குத்தியதாக அதே பகுதியில் வசிக்கும் சண்முகம் மகன் பிரபு (வயது 19), ஆதிமணி மகன் பூர்ணசந்திரன் (19), சுந்தரபாண்டியன் மகன் மணி (18) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News