செய்திகள்
விபத்து

கல்லாவி அருகே ஓய்வு பெற்ற மில் தொழிலாளி விபத்தில் பலி

Published On 2019-09-02 16:06 GMT   |   Update On 2019-09-02 16:06 GMT
கல்லாவி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சிவநாதன் (வயது 60), ஓய்வு பெற்ற மில் தொழிலாளி. நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டர் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News