செய்திகள்
கைது

வல்லம் அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

Published On 2019-08-31 10:27 GMT   |   Update On 2019-08-31 10:27 GMT
வல்லம் அருகே தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லம்:

தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே அய்யாசாமிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 63). சலவை தொழிலாளி. அதே தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜா (31). இவர்கள் இருவருக்கும் இடம் சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.

இந்நிலையில் சம்பவதன்று ராஜா, நாகராஜ் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த நாகராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து நாகராஜ் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

Tags:    

Similar News