செய்திகள்
கைது

ஆரல்வாய்மொழி அருகே ரே‌ஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Published On 2019-08-29 09:01 GMT   |   Update On 2019-08-29 09:01 GMT
ஆரல்வாய்மொழி அருகே ரே‌ஷன் அரிசி கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் ஆரல்வாய்மொழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக வந்த ஒரு டெம்போ, போலீசாரை பார்த்ததும் நிற்காமல் வேகமாகச் சென்றது. போலீசார் அந்த டெம்போவை ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்தனர்.

டெம்போவை சோதனை செய்தபோது அதில் ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. சிறு, சிறு மூட்டைகளாக மொத்தம் 800 கிலோ அரிசி அதில் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டெம்போ டிரைவரான தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (27), மற்றும் டெம்போவில் இருந்த மாரிச்செல்வம் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். டெம்போவும், கடத்தப்பட்ட ரே‌ஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News