செய்திகள்
கொள்ளை

கும்மிடிப்பூண்டியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2019-08-25 10:05 GMT   |   Update On 2019-08-25 10:05 GMT
கும்மிடிப்பூண்டியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் பஜாரில் மோகன்லால் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மின்வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இவரது கடையையொட்டி பாபு என்பவர் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையிலும் பூட்டைஉடைத்து ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள டயர்கள் உள்ளிட்ட பொருட்கள், ரூ. 14 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News