செய்திகள்
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

Published On 2019-08-14 12:04 GMT   |   Update On 2019-08-14 12:04 GMT
திருச்சி மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தூனிஸ்மேரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசுமதி மதுரை மாநகருக்கும், திருச்சி மாநகர பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி, கே.கே.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி, திருச்சி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் வளர்மதி, துவாக்குடி இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் நுண்ணறிவு பிரிவுக்கும்,

கியூபிரிவு இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மத்திய மண்டலத்துக்கும், எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மணிராஜ் திருச்சி மாநகருக்கும், உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் சி.ஐ.டி. பிரிவுக்கும், வையம்பட்டி இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி மதுரை மாநகருக்கும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் உமாசங்கர், மாநகர குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரோசலின், ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா, கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் மேற்கு மண்டலத்துக்கும்,

திருச்சி மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தூனிஸ்மேரி பொருளாதார குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News