செய்திகள்
மது குடிக்கும் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது55). கூலித்தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுப்பிரமணி, மது அருந்திவிட்டு மது போதையில், விஷமருந்தி உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.