செய்திகள்
பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு பிரிவுகள் திறப்பு
பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் 2 ரத்த சுத்திகரிப்பு பிரிவுகள் திறப்பு விழா நடைபெற்றது.
அரவக்குறிச்சி:
பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் 2 ரத்த சுத்திகரிப்பு பிரிவுகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சாந்தா தேவி தலைமை தாங்கி ரத்தசுத்திகரிப்பு பிரிவுகளை தொடங்கி வைத்தார்.
முன்னாள் மருத்துவ இணை இயக்குனர்கள் டாக்டர் ராமராஜ், டாக்டர் அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் சுதா வரவேற்று பேசினார். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் முனவர்ஜான், கரூர் மருந்து வணிகர் சங்க ஆலோசகர் பாப்புலர் அபுதாகீர், டாக்டர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் 2 ரத்த சுத்திகரிப்பு பிரிவுகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சாந்தா தேவி தலைமை தாங்கி ரத்தசுத்திகரிப்பு பிரிவுகளை தொடங்கி வைத்தார்.
முன்னாள் மருத்துவ இணை இயக்குனர்கள் டாக்டர் ராமராஜ், டாக்டர் அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் சுதா வரவேற்று பேசினார். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் முனவர்ஜான், கரூர் மருந்து வணிகர் சங்க ஆலோசகர் பாப்புலர் அபுதாகீர், டாக்டர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.