செய்திகள்
கோவையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 வியாபாரிகள் கைது
கோவையில் கஞ்சை விற்பனை செய்தது தொடர்பாக 3 வியாபாரிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பீளமேடு:
கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பீளமேடு இன்ஸ்பெக்டர் ஜோதிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் தேடுதல் வேட்டையில் இறங்கினார்.
விளாங்குறிச்சி ரோடு தண்ணீர் பந்தல் அருகே கஞ்சா விற்பனை செய்த பீளமேடு கருப்பண்ண கவுண்டர் வீதியை சேர்ந்த நல்லிவீரன் (வயது 29) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த ஒரு கிலோ 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி நல்லிவீரனை கைது செய்தார்.
அவருடன் கஞ்சா விற்பனை ஈடுபட்ட யமஹா ரவி (30) என்பவர் தப்பினார். இந்நிலையில் சரவணம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையில் போலீசார் தெலுங்கு பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற யமஹா ரவி (56) என்பவரை கைதானர்.
அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ3,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த பிரஜூத் (23) என்பவரும் சிக்கினார். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பீளமேடு இன்ஸ்பெக்டர் ஜோதிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் தேடுதல் வேட்டையில் இறங்கினார்.
விளாங்குறிச்சி ரோடு தண்ணீர் பந்தல் அருகே கஞ்சா விற்பனை செய்த பீளமேடு கருப்பண்ண கவுண்டர் வீதியை சேர்ந்த நல்லிவீரன் (வயது 29) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த ஒரு கிலோ 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி நல்லிவீரனை கைது செய்தார்.
அவருடன் கஞ்சா விற்பனை ஈடுபட்ட யமஹா ரவி (30) என்பவர் தப்பினார். இந்நிலையில் சரவணம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையில் போலீசார் தெலுங்கு பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற யமஹா ரவி (56) என்பவரை கைதானர்.
அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ3,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த பிரஜூத் (23) என்பவரும் சிக்கினார். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.