செய்திகள்
அறநிலையத்துறை அதிகாரி கவிதா

அறநிலையத்துறை அதிகாரி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை- தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-08-08 06:03 GMT   |   Update On 2019-08-08 07:53 GMT
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கவிதா மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மறு ஆய்வு செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்து தனக்கு மீண்டும் பணி வழங்கும்படி தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்தார். 

அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அறநிலையத்துறை அதிகாரி கவிதா மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மறு ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்காக 4 வாரம் அவகாசம் அளித்துள்ளது. 
Tags:    

Similar News