செய்திகள்
மரணம்

சுரண்டையில் ஓடையில் தவறி விழுந்த சலவை தொழிலாளி பலி

Published On 2019-08-07 10:31 GMT   |   Update On 2019-08-07 10:31 GMT
சுரண்டையில் ஓடையில் தவறி விழுந்த சலவை தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரண்டை:

சுரண்டை அழகுபார்வதி அம்மன் கோவில் அருகே வசிப்பவர் பண்டாரம்(வயது 47), சலவை தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சிறுநீர் கழிப்பதற்காக செண்பகக் கால்வாய் ஓடைப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி ஓடைக்குள் விழுந்தார். இதில் அங்கு தேங்கியிருந்த சாக்கடை நீரில் மூச்சுத் தினறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News