செய்திகள்
காஷ்மீர் விவகாரம் - பிரதமருக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பாராட்டு
காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பாராட்டி தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.
சென்னை:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
பாரதப் பிரதமர் மோடி அவர்களே. நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் ஒன்றுபட்ட இந்தியாவின் நன்மைக்கே. நீங்கள் நிறைவேற்றுகின்ற ஒவ்வொரு சட்டமும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியே.
உங்களது தைரியமான முடிவில் நேதாஜியை பார்க்கிறோம். தேச ஒற்றுமைக்கு நீங்கள் எடுக்கின்ற கடுமையான நடவடிக்கைகளில் சர்தார் வல்லபாய் படேலை பார்க்கிறோம். நீங்கள் பயணிக்கின்ற தெய்வீக வழிமுறையில் பசும்பொன் தேவரை பார்க்கிறோம். உங்கள் தைரியமான முடிவுக்குப் பின்னால் மதம், மொழி, இனங்களைக் கடந்து தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் உங்கள் பின்னால் இருப்பான்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
பாரதப் பிரதமர் மோடி அவர்களே. நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் ஒன்றுபட்ட இந்தியாவின் நன்மைக்கே. நீங்கள் நிறைவேற்றுகின்ற ஒவ்வொரு சட்டமும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியே.
உங்களது தைரியமான முடிவில் நேதாஜியை பார்க்கிறோம். தேச ஒற்றுமைக்கு நீங்கள் எடுக்கின்ற கடுமையான நடவடிக்கைகளில் சர்தார் வல்லபாய் படேலை பார்க்கிறோம். நீங்கள் பயணிக்கின்ற தெய்வீக வழிமுறையில் பசும்பொன் தேவரை பார்க்கிறோம். உங்கள் தைரியமான முடிவுக்குப் பின்னால் மதம், மொழி, இனங்களைக் கடந்து தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் உங்கள் பின்னால் இருப்பான்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.