search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ராஜேந்திரபாலாஜி"

    தேர்தல் யுத்தத்தில் பிரதமர் மோடி எங்கள் கிருஷ்ணர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். #MinisterRajendraBalaji #ADMK

    சிவகாசி:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் பிளவை ஏற்படுத்தலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களது எண்ணம் நிறைவேறாது. தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டது எங்கள் கூட்டணி. நாங்கள் பள்ளி வாசலில் தொழுகை நடத்துவோம். தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வோம். அனைத்து கோவில்களில் சாமியும் கும்பிடுவோம்.

    மகாபாரதத்தில் கிருஷ்ணர் தலைமையில் அவரது ஆலோசனைப்படி பஞ்சபாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல நாங்களும் வெற்றி பெறுவோம். தேர்தல் யுத்தத்தில் மோடிதான் எங்களின் கிருஷ்ணர். அர்ஜுணனாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.


    8 வழிச்சாலை திட்டத்தை பொதுமக்கள் எதிர்த்தால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த திட்டத்தை கைவிடலாம். 8 வழிச்சாலை திட்டம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வார்.

    மோடி வாயால் வடை சுடுவார் என மு.க. ஸ்டாலின் எழுதி வைத்து பேசுகிறார். மோடி வடை சுட்டால் அனைவருக்கும் பயன்படும். தி.மு.க.வினர் சூடான எண்ணையை மக்கள் மீது ஊற்றி விடுவார்கள். சாப்பிட்ட வடை, புரோட்டாவுக்கு காசு கேட்டால் முகத்தில் குத்துகிறார்கள். பெண்களிடமே மாமூல் கேட்கும் கட்சி தி.மு.க.

    கிருஷ்ணரை கேவலப்படுத்தும் வீரமணியை வைத்துக் கொண்டு திருநீறு பூசுவது போல் நாடகம் போட்டு ஓட்டு வாங்க அலைகின்றனர். தி.மு.க.வினர் வீரமணி பேச்சை திசை திருப்பு வதற்காக நாடகம் நடத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterRajendraBalaji #ADMK

    மோடியை டாடி என்று சொல்வதில் தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். #ministerrajendrabalaji

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அழகர்சாமி போட்டியிடுகிறார். அவரது அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-

    எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. எங்கள் கட்சியில் உழைப்பவர்களுக்கு மட்டும் தான் சீட் கிடைக்கும். அம்மா இருந்த போதே ஓ.பி.எஸ். மகனுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஜனநாயக கூட்டணி. தி.மு.க. ரவுடி கட்சி. ராதாரவியை சமயம் பார்த்து ஸ்டாலின் பழிவாங்கி விட்டார்.

     


    ஜெயலலிதா இருந்த போதே ஓ.பி.எஸ். மகனுக்கு இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தி.மு.க.வில் 3-வது தலை முறையாக ஸ்டாலின் மகன் வந்துள்ளார்.

    அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும். அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. டி.டிவி. தினகரனுக்கு கண்டிப்பாக பொதுச் சின்னம் கிடைக்காது. தேர்தல் கமி‌ஷனில் ஒரு மாதத்திற்கு முன்பே பதிந்திருக்க வேண்டும். சட்டத்தை யாராலும் வளைக்க முடியாது.

    ஜல்லிக்கட்டிற்கு தடை போட்டது தி.மு.க. ஆட்சி. தடையை நீக்கியது அ.தி.மு.க. ஆட்சி. மோடியை டாடி எனக் கூறுவதில் என்ன தவறு? இந்திராவை அவர்கள் அன்னை எனக் கூறவில்லையா? நாங்களும் இந்திராவை அன்னை என்றுதானே கூறுகிறோம். மோடியை தந்தை (டாடி) என கூறுவதில் தவறில்லை. எங்கள் கூட்டணி மதச்சார் பற்ற கூட்டணி.

    இதற்கு மதச்சாயம் பூசுகிறார்கள். பி.ஜே.பி. ஆட்சி காலத்தில் தான் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.

    ஜார்ஜ் பெர்னான்டஸ் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. 40-க்கு 40 பாராளுமன்ற தொகுதியிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றார். #ministerrajendrabalaji

    சிவகாசி அருகே பேனர் வைக்கும்போது தவறி விழுந்து இறந்த சிறுவன் குடும்பத்துக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார். #MinisterRajendraBalaji
    விருதுநகர்:

    சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரைச் சேர்ந்தவர் வீரம்மாள். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் மாடசாமி (வயது 15) படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு பிளக்ஸ் போர்டு, கட்சி கொடிகள் கட்டும் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவிலில் டி.டி.வி. தினகரன் பங்கேற்ற அ.ம.மு.க. கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தினகரனை வரவேற்பதற்காக மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

    கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்தபின் மாடசாமி பிளக்ஸ் போர்டுகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது ரெங்கபாளையம் என்ற இடத்தில் இருந்த பிளக்ஸ் போர்டை எடுப்பதற்காக சாரம் மீது ஏறியபோது மாடசாமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையறிந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மாடசாமியின் வீட்டிற்கு சென்று அவரது தாயாருக்கும், குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார். தொடர்ந்து ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதியளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தலைவர் ரமணா உள்பட அ.தி.மு.க.வினர் உடன் இருந்தனர். #MinisterRajendraBalaji
    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் பாலை வார்த்துள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #ADMK #RajendraBalaji #FirecrackersSale #SupremeCourt
    சிவகாசி:

    விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பட்டாசு மீதான தடை நீக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு பெரும் முயற்சி எடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீர்ப்பு 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வில் பாலை வார்த்துள்ளது.

    அமைச்சர் ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. தற்போது மேடைகளில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்று பேசி நடிக்கிறார்கள். எனவே அமைச்சர் ஜெயக்குமார் போல் வேண்டுமென்றே யாராவது பேசியிருக்கலாம்.


    குற்றாலத்தில் தற்போது தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் குளிக்கச் சென்றிருப்பார்கள்.

    பால் கொள்முதல் உயர்வு குறித்து கூட்டுறவு சங்கத்தேர்தல் முடிந்தவுடன் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #RajendraBalaji  #FirecrackersSale #SupremeCourt
    சிவகாசி அருகே திருத்தங்கலில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். #RajendraBalaji #ADMK
    சிவகாசி:

    நாடு முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கலில் தேவர் உறவின் முறை சார்பாக 6-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாதார தனைகள் நடைபெற்றது. பின்னர் ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிவழியாக ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, ஜெயலலிதாபேரவை நகர செயலாளார் ரமணா, கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜவர்மன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன்.

    சிவகாசி இளைஞர் பாசறை சங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருத்தங்கல் தேவர் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விநாயகர் பக்தர் பேரவை சார்பாக 24-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு பொறுப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார். தொழிலதிபர் சீனிவாசன், துணைத்தலைவர்கள் கலைவாணன், ஆட்டோகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மாரியப்பன் ஆகியோர் வரவேற்றார்.

    ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜூவா, கேசவ ராமசந்திரன் நிர்வாகிகள் அழகேச பாண்டியன், சுரேஷ், முருகவேல், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையத்தில் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.

    மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமை தாங்கினார்.

    காவல் நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் அலங்கார யானை முன்னே செல்ல ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், டிராக்டர் ஓட்டும் விநாயகர் என பல்வேறு உருவங்கள் கொண்ட விநாயகர் சிலைகள் எடுத்து செல்லப்பட்டன. ஊர்வலம் முடிந்ததும். ஐ.என்.டி.யூ.சி.நகர் அருகே உள்ள குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. #RajendraBalaji #ADMK
    தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி நடந்து வருவதாக சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
    சிவகாசி:

    சிவகாசியில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதி கொண்ட புதிய சொகுசு பஸ் சேவையை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    தமிழக மக்கள் அனைவரும் குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்களில் பயணம் செய்வதற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு புதிய வழித்தடங்களையும், புதிய பஸ்களையும் அறிமுகம் செய்து அதனை செயல்படுத்தினார்.

    ஜெயலலிதா வழியில் செயல்படுகின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனியார் பஸ்களுக்கு இணையாக அரசு பஸ்களும், நவீன மயமாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் 515 புதிய அதி நவீன பஸ்களை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

    படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதி மட்டுமல்லாமல் கூடுதலாக கழிப்பறை வசதிகளும் புதிய பஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு மேலும் 35 பஸ்கள் வழங்குவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுவதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகின்றார். தமிழகத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் திட்டங்களை மட்டுமே முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றி வருகிறார். மக்கள் எதிர்க்கும் திட்டங்கள் பூட்டப்பட்டும் வருகின்றது.

    தமிழக வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சில அரசியல் கட்சிகள் வேண்டும் என்றே வம்புக்காக பிரச்சனைகளை திசை திருப்பி தூண்டி விடுகின்றன. இந்த ஆட்சி மக்களுக்கு எதிரான ஆட்சி என்ற ஒரு மாய நிலையை உருவாக்க பார்க்கின்றனர். இது போன்ற தீய சக்திகளின் முயற்சிகள் தமிழகத்தில் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் பொதுமேலாளர் மகேந்திர குமார், கிளை மேலாளர் மாரிமுத்து, சிவகாசி அண்ணா தொழிற்சங்க செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, நகர செயலாளர் அசன் பதூரூதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #RajendraBalaji
    ×