செய்திகள்
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நாளை மின்தடை
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
சிங்கை:
விக்கிரமசிங்கபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (2-ந்தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், சேர்வலார், ரவணசமுத்திரம், ஜமீன் சிங்கம்பட்டி, ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஆலடியூர், ஆம்பூர், பாப்பன் குளம், அடையகருங்குளம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற் பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.