செய்திகள்
கூடலூர் அருகே சந்தனமரங்களை வெட்டி கடத்த முயன்றவர்கள் கைது
கூடலூர் அருகே சந்தமனமரங்கள் வெட்டி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்:
குமுளி போலீஸ் சரகத்திற்குட்பட்ட லோயர்கேம்ப், கழுகுமேடு பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஜோஸ் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தோட்டத்திற்குள் புகுந்த 2 வாலிபர்கள் அங்கிருந்த விவசாய கருவிகளை திருடினர். மேலும் அருகில் இருந்த தோட்டத்தில் சந்தமன மரங்களை வெட்டி கடத்த முயன்றனர். பொதுமக்கள் ஒன்றுகூடவே அவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர்.
பின்னர் அவர்களை பிடித்து குமுளி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் கூடலூர் அண்ணாநகரை சேர்ந்த சரத் என்ற பசுபதி(24), விஜி (35) என தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.