செய்திகள்
போராட்டம்

குடிநீர் வழங்காததை கண்டித்து குன்னூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2019-07-24 10:56 GMT   |   Update On 2019-07-24 10:56 GMT
குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் குன்னூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

குன்னூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நீடிக்கிறது. இதனால் ஒரு குடம் தண்ணீர் ரூ.5-ல் இருந்து ரூ.10 வரை விற்கப்படுகிறது.

மேலும் குன்னூர் நகராட்சியில் கடந்த 23 நாட்களாக தண்ணீர் வரவில்லை.

இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் குன்னூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News