செய்திகள்
மின்வெட்டு

திருமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2019-07-19 10:46 GMT   |   Update On 2019-07-19 10:46 GMT
கப்பலூர் மற்றும் திருமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
பேரையூர்:

திருமங்கலம் பகுதியில் நாளை (சனிக்கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

இது குறித்து திருமங்கலம் வட்டார மின் வாரிய செயற்பொறியாளர் மங்களநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கப்பலூர் மற்றும் திருமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

எனவே அந்த நேரத்தில் திருமங்கலம் நகர், உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, சிவரக்கோட்டை, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லைநகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News