செய்திகள்
தீயில் எரிந்து நாசமான கடையை படத்தில் காணலாம்.

கலெக்டர் அலுவலகம் அருகே கடைக்கு தீ வைத்த மர்ம கும்பல்

Published On 2019-07-18 11:49 GMT   |   Update On 2019-07-18 11:49 GMT
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே கடைக்கு தீ வைத்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை ஓரம் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இங்கு இரவு நேரத்தில் இட்லி, சிக்கன் உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இப்பகுதியில் உள்ள கடையில் திடீரென தீ பற்றி பொருட்கள் எரிந்து நாசமானது.

அந்த கடையை சீரமைத்து மீண்டும் விற்பனையை தொடங்கினர்.

இந்த நிலையில் நேற்று இரவு அதே கடைக்கு ஒரு கும்பல் தீ வைத்து சென்றது. இதனால் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தீ வைத்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

தொடர்ந்து ஒரே கடைக்கு தீ வைப்பதால் தொழில் போட்டி காரணமாக யாரும் கடைக்கு தீ வைத்தார்களா? அல்லது குடி போதையில் மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News