செய்திகள்
கூட்டம்

நெல்லையில் நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2019-07-18 10:56 GMT   |   Update On 2019-07-18 10:56 GMT
நெல்லை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (19-ந்தேதி) காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வைத்து நடைபெறும்.

இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News