search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கூட்டம்"

    • விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
    • தவணைத் தொகையினை பெறுவதற்கு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தின் மே 2023 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 26.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே. விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

    பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13வது தவணைத் தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம். கிசான் இணையதளத்தில் பதிவுசெய்து உறுதிசெய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல்ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது கைபேசியில் வைத்து உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும், விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவுகள் மேற்கொள்ள ஆதார் அட்டை நகல். புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவற்றுடன் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார். 

    • செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.
    • மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜவகர் பிரசாத் ராஜ் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது. இதில் சார் ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், வேளாண்மை இணை இயக்குநர் அசோக், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தமிழ் செல்வி, தமிழ் நாடு நுகர்போருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் மோகன், வங்கி மேலாளர் சரவணபாண்டியன், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜவகர் பிரசாத் ராஜ் கலந்து கொண்டனர்.

    • ஆலையால் ஐந்து கிராம மக்கள் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • கால்வாய்களை தூர்வாரவும், சீர்படுத்தவும் முடியவில்லை என தெரிவித்தனர்.

    அரூர்,

    அரூரில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் அலமேலுபுரம் தனியார் மரவள்ளி கிழங்கு ஆலை மீது பலமுறை விவசாயிகள் புகார் செய்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் ஆலையால் ஐந்து கிராம மக்கள் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மனுக்கள் கொடுத்தும் வலியுறுத்தியும் மாசு கட்டுப்பாடு வாரியம் மெத்தனபோக்கோடு செயல்படுகின்றது. 20 வருடமாக விவசாயிகள் போராடியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுப்பணி துறை மீதும் உடந்தையாக உள்ள அலுவலர்கள் மீது பொது நலன் வழக்கு தொடரப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். வரட்டாறு கால்வாய்கள் அணைத்திறப்புக்கு முன்பு தூர்வார வேண்டும் என வலியுறுத்தியும் சரியாக தூர்வாரப்படாததால் நீர் வீணாகிறது என்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதற்கு பதில் அளிக்கையில் பெரும்பாலான ஏரிகள் வட்டார வளர்ச்சி துறை வசம் உள்ளதால் பொதுப்பணித்துறை மூலம் நிதி ஒதுக்கி கால்வாய்களை தூர்வாரவும், சீர்படுத்தவும் முடியவில்லை என தெரிவித்தனர்.

    விவசாயிகளும் கால்வாய் பகுதிகளை தங்களது விவசாயக் கழிவுகளை கொட்டும் இடமாக பயன்படுத்தாமல் ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் அனைத்து பகுதிகளுக்கும் நீர் செல்ல வசதியாக இருக்கும் எனவும் பொதுப்பணித்துறையினர் விவசாயிகளை கேட்டுக்கொண்டனர்.

    கோபாலபுரம் சர்க்கரை ஆலையில் இணை மின் நிலையம் அமைக்க 13 -ஆண்டுகளுக்கு முன் பங்களிப்பு செய்த விவசாயிகளுக்கு பணத்தை திருப்பி தர வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள், சர்க்கரை ஆலையிலிருந்து பொதுக்குழு, மகாசபை உள்ளிட்ட கூட்டங்களுக்கு முறையாக தகவல் தருவதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

    மேலும் கூட்டத்தின் போது வேளாண்மை துறை சார்பில் ஏர் கலப்பைகள், தார்ப்பாய் ,கடப்பாறை, மண்வெட்டி உள்ளிட்டவைகள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் 80 சதவீதம், ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட கிராமங்களிலும் செயல்படுத்தப் பட்டுள்ளதால் விவசாயிகள் பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டது. bவிவசாயிகள் தார்பாய்கள் வாங்கும் பொழுது மானிய விலை ரூ. 1300 என அறிவிக்கும் அதிகாரிகள் வாங்கும் பொழுது ரூ.1440 பெறுகின்றனர். கூடுதலாக வாங்கும் தொகைக்கு 2021-ல் தயார் செய்யப்பட்டு காலாவதியாகும் நிலையில் உள்ள உயிர் உரத்தை தருவதாக கூறினர். அதற்கு கோட்டாாட்சியர் இனி விவசாயிகள் விருப்பம் இன்றி உயிர் உரம் தரப்படாது என உறுதியளித்தார்.

    கூட்டத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இளஞ்செழியன், பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

    • விவசாய பெருமக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
    • கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற ஜூலை 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுனர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    இக்கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் இணையவழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் அரசு அறிவுரையின்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகலை காண்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×