செய்திகள்
கம்பைநல்லூர் அருகே பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை
கம்பைநல்லூர் அருகே பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரை அடுத்துள்ள போலையம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி சாக்கம்மாள் (வயது50). கூலிதொழிலாளியான இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு உடல் நலம் குணமாக வில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சாக்கம்மாள் நேற்று வீட்டில் பூச்சி மருந்தை குடித்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சாக்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.