செய்திகள்
மிரட்டல்

வத்தலக்குண்டு அருகே மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

Published On 2019-07-09 11:24 GMT   |   Update On 2019-07-09 11:24 GMT
வத்தலக்குண்டு அருகே மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகில் உள்ள கோம்பைபட்டியை சேர்ந்த முத்து மகன் வைரமணி (வயது20). பால் கறக்கும் தொழில் செய்து வருகிறார். இது தொடர்பாக அவரது தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் நேற்று வைரமணியை அவரது தந்தை அடித்து விட்டார். இதனால் கோபம் அடைந்த வைரமணி வடுகன் என்பவரது தோட்டத்தில் உள்ள 1500 கே.பி.ஏ. உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

சம்பவ இடத்துக்கு நிலக்கோட்டை டி.எஸ்.பி. பாலகுமார், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் மற்றும் போலீசார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார், நிலைய அலுவலர் கோபால், ஜோசப் ஆகியோர் விரைந்து வந்து வாலிபரை கீழே இறங்கி கொண்டு வந்தனர். அதன்பின்னர் வைரமணிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்வதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News