செய்திகள்
கொள்ளை

கீழ்ப்பாக்கத்தில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் திருட்டு

Published On 2019-07-04 09:18 GMT   |   Update On 2019-07-04 09:18 GMT
சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை மற்றும் பணம் காணாமல் போனது குறித்து வேலைக்காரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை:

சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் செல்வராணி.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ரூ.5 ஆயிரம் பணம், 2 பவுன் நகை ஆகியவை திருடப்பட்டுள்ளது. பூட்டு உடைக்கப்படாத நிலையில் நகை-பணம் காணாமல் போனது பற்றி கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் செல்வராணியின் வீட்டில் வேலை செய்துவரும் உமையாள் என்ற பெண்ணின் மீது சந்தேகம் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News