செய்திகள்

காதல் தோல்வி: சட்ட கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2019-06-26 11:52 GMT   |   Update On 2019-06-26 11:52 GMT
கோவையில் காதல் தோல்வி அடைந்த சட்ட கல்லூரி மாணவர் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கவுண்டம்பாளையம்:

கோவை சின்னதடாகம் புதூரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (22). இவர் பெங்களூருவில் உள்ள ராஜிவ்காந்தி சட்ட கல்லூரியில் அஞ்சல் வழியில் 5-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் சாணிபவுடரை குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். கோபாலகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் காதல் தோல்வி காரணமாக கோபாலகிருஷ்ணன் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Tags:    

Similar News