செய்திகள்

தர்மபுரி அருகே கூலித்தொழிலாளி மனைவி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-06-19 15:20 GMT   |   Update On 2019-06-19 15:20 GMT
தர்மபுரி அருகே குடும்ப தகராறில் தகூலித்தொழிலாளி மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. கூலித்தொழிலாளியான இவர் தனியார் கம்பெனியில் கிரானைட் கற்களை இறக்கி வைப்பதற்காக கோவைக்கு சென்று விட்டார். இவருக்கு  திருமணமாகி கோகிலா (வயது25) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 

நேற்று கோகிலாவுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோகிலா வீட்டில் தனியாக இருந்த போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் உடனே தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 வருடங்கள் ஆனநிலையில் கோகிலாவு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News