செய்திகள்

3 மனைவிகள் இருக்கும் போது 4-வது திருமணம் செய்ய முயன்றவர் கைது

Published On 2019-06-19 08:50 GMT   |   Update On 2019-06-19 08:50 GMT
3 திருமணம் ஆனதை மறைத்து மோசடியில் ஈடுபட்டு 4-வது திருமணம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

சாலிகிராமம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 47). இவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவி உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு 3-வதாக தேவிகா என்ற பெண்ணை அஜித்குமார் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மகன் உள்ளார்.

அஜித்குமாருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கேரளாவில் மனைவி, குழந்தைகள் இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவிகாவிற்கு தெரியவந்தது.

இந்த நிலையில் தேவிகாவை விட்டு பிரிந்து சென்ற அஜித்குமார் நான்காவதாக வேறு ஒரு பெண்ணிடமும் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்னை விரைவில் திருமணம் செய்து கொள்ள அஜித்குமார் முடிவு செய்து இருந்தார்.

இதுகுறித்து தேவிகா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார் உதவி கமி‌ஷனர் மகிமை வீரன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் கவுதமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து திருமணம் ஆனதை மறைத்து மோசடியில் ஈடுபட்டு 4-வது திருமணம் செய்ய முயன்ற அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News