செய்திகள்

திருவள்ளூர் அருகே தியேட்டரில் படம் பார்த்தவர் திடீர் மரணம்

Published On 2019-06-19 07:19 GMT   |   Update On 2019-06-19 07:19 GMT
திருவள்ளூர் அருகே தியேட்டரில் படம் பார்த்தவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது56) தனியார் கம்பெனி ஊழியர்.

இவர் நேற்று மாலை மணவாளநகரில் உள்ள தியேட்டரில் ‘100’ என்ற படம் பார்க்கச் சென்றார். படம் முடிந்து அனைவரும் வெளியே சென்றுவிட்டனர்.

ஆனால் நரசிம்மன் மட்டும் இருக்கையிலேயே அமர்ந்து இருந்தார். இதை கவனித்த தியேட்டர் ஊழியர்கள் நரசிம்மனை எழுப்ப முயற்சித்த போது மயங்கிய நிலையில் கிடந்தார்.

இது குறித்து மணவாளநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நரசிம்மனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நரசிம்மன் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News