செய்திகள்

மதுரையில் என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் கொள்ளை

Published On 2019-06-18 08:10 GMT   |   Update On 2019-06-18 08:10 GMT
மதுரையில் என்ஜினீயர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை நரிமேடு நடராஜ்நகரில் உள்ள தாமரை வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45). என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ. 15 ஆயிரத்து 500 ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மதுரை சொக்கிகுளம் ஜவகர் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 67). இவர் கோகலே ரோட்டில் மெடிக்கல் லேப் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது லேப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ. 42 ஆயிரத்து 35-ஐ திருடி சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Tags:    

Similar News