செய்திகள்
கிணற்றில் விழுந்த பள்ளி மாணவர் பலி
பெரம்பலூர் அருகே கால் தவறி கிணற்றில் விழுந்த சிறுவன நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆய்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் தனுஷ்(வயது 14). 9-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 10-ம் வகுப்பு செல்ல இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள மனோகர் என்பவருக்கு சொந்தமான கிணறு அருகே தனுஷ் சென்று கொண்டு இருந்தபோது, கால் தவறி கிணற்றில் விழுந்தார். இதில் நீச்சல் தெரியாத தனுஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தனுஷின் உடலை மீட்டனர். இதுகுறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆய்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் தனுஷ்(வயது 14). 9-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 10-ம் வகுப்பு செல்ல இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள மனோகர் என்பவருக்கு சொந்தமான கிணறு அருகே தனுஷ் சென்று கொண்டு இருந்தபோது, கால் தவறி கிணற்றில் விழுந்தார். இதில் நீச்சல் தெரியாத தனுஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தனுஷின் உடலை மீட்டனர். இதுகுறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.