செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் திடீர் உயிரிழப்பு - திருமணங்கள் நிறுத்தம்
மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து இன்று நடைபெற வேண்டிய திருமணங்கள் நிறுத்தப்பட்டன.
மதுரை:
மதுரை வில்லாபுரம் கற்பகம் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 62). இவர் மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்காக இன்று காலை கோவிலுக்கு வந்தார்.
அம்மன் சன்னதி பிரகார வீதியில் வலம் வந்தபோது மகேஸ்வரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற போராடினர். இருப்பினும் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டது.
கோவில் ஆகம விதிகளின்படி சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே பக்தர்களை அனுமதிக்க முடியும். எனவே கோவிலில் இருந்த அனைத்து பக்தர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இன்று முகூர்த்தநாள் என்பதால் கோவிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற இருந்தது. திடீரென பெண் உயிரிழந்ததால் திருமணங்கள் நிறுத்தப்பட்டன. பரிகார பூஜைகள் முடிந்ததும் திருமணங்கள் நடைபெறும்.
மதுரை வில்லாபுரம் கற்பகம் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 62). இவர் மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்காக இன்று காலை கோவிலுக்கு வந்தார்.
அம்மன் சன்னதி பிரகார வீதியில் வலம் வந்தபோது மகேஸ்வரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற போராடினர். இருப்பினும் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டது.
கோவில் ஆகம விதிகளின்படி சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே பக்தர்களை அனுமதிக்க முடியும். எனவே கோவிலில் இருந்த அனைத்து பக்தர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இன்று முகூர்த்தநாள் என்பதால் கோவிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற இருந்தது. திடீரென பெண் உயிரிழந்ததால் திருமணங்கள் நிறுத்தப்பட்டன. பரிகார பூஜைகள் முடிந்ததும் திருமணங்கள் நடைபெறும்.