செய்திகள்
குடிநீர் பற்றாக்குறை - லாரி தண்ணீருக்காக 12 நாட்களாக காத்திருக்கும் பொதுமக்கள்
சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பற்றாக்குறையால், லாரி தண்ணீருக்கு பொதுமக்கள் 12 நாட்களாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் கடும் கோடையால் வறண்டு விட்டன.
பொதுமக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் தண்ணீரை தேடி வீதி வீதியாக அலைந்து வருகிறார்கள்.
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கல்குவாரி தண்ணீர், வீராணம் தண்ணீர், திருவள்ளூர் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து சென்னை நகர மக்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள். இருந்த போதிலும் குடிநீர் பற்றாக்குறையால் சென்னை மாநகர பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னை மாநகர மக்களுக்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. லாரி தண்ணீருக்கு பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குடிசை பகுதி மக்களுக்கு லாரி தண்ணீர் இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் 3282 லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
வீடுகளுக்கு லாரி தண்ணீர் கேட்டு பதிவு செய்துள்ளவர்கள் 12 நாட்களாக காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து கோடம்பாக்கத்தை சேர்ந்த குடியிருப்புவாசி கோபி கூறியதாவது:-
பருவமழை சரியாக பெய்யாததாலும் கடும் கோடை வெயிலாலும் சென்னை மாநகர மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறோம். நிலத்தடி நீர்மட்டம் 300 அடிக்கு கீழே சென்றுவிட்டது.
குடிதண்ணீர் தேவைக்காக லாரி தண்ணீரை நம்பி இருக்கிறோம். லாரி தண்ணீர் கேட்டு பதிவு செய்து 12 நாட்களுக்கு காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அன்றாட பணிகள் செய்ய முடியவில்லை. தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். கூடுதல் லாரிகள் மூலம் வீடுகளுக்கு லாரி தண்ணீர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் கடும் கோடையால் வறண்டு விட்டன.
பொதுமக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் தண்ணீரை தேடி வீதி வீதியாக அலைந்து வருகிறார்கள்.
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கல்குவாரி தண்ணீர், வீராணம் தண்ணீர், திருவள்ளூர் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து சென்னை நகர மக்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள். இருந்த போதிலும் குடிநீர் பற்றாக்குறையால் சென்னை மாநகர பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னை மாநகர மக்களுக்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. லாரி தண்ணீருக்கு பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குடிசை பகுதி மக்களுக்கு லாரி தண்ணீர் இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் 3282 லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
வீடுகளுக்கு லாரி தண்ணீர் கேட்டு பதிவு செய்துள்ளவர்கள் 12 நாட்களாக காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து கோடம்பாக்கத்தை சேர்ந்த குடியிருப்புவாசி கோபி கூறியதாவது:-
பருவமழை சரியாக பெய்யாததாலும் கடும் கோடை வெயிலாலும் சென்னை மாநகர மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறோம். நிலத்தடி நீர்மட்டம் 300 அடிக்கு கீழே சென்றுவிட்டது.
குடிதண்ணீர் தேவைக்காக லாரி தண்ணீரை நம்பி இருக்கிறோம். லாரி தண்ணீர் கேட்டு பதிவு செய்து 12 நாட்களுக்கு காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அன்றாட பணிகள் செய்ய முடியவில்லை. தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். கூடுதல் லாரிகள் மூலம் வீடுகளுக்கு லாரி தண்ணீர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.