செய்திகள்

ஒரத்தநாடு அருகே பிளஸ்-2 மாணவி மாயம்: போலீசார் விசாரணை

Published On 2019-04-24 11:57 GMT   |   Update On 2019-04-24 11:57 GMT
ஒரத்தநாடு அருகே பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அடுத்த சிறுநல்லூர் அருகே உள்ள சதுர்காடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் ரேவதி (வயது 18). இவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த ரேவதி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் ரேவதியை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பாப்பாநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராமசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான ரேவதியை தேடி வருகிறார்.
Tags:    

Similar News