செய்திகள்

கண்டாக்டர் தோட்டத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-04-05 13:07 GMT   |   Update On 2019-04-05 13:07 GMT
புதுவை கண்டாக்டர் தோட்டத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். (வயது 52). ஆட்டோ டிரைவர்.

இவருக்கு லதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குணசேகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதனால் அவர் ஆட்டோ தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். ஆனாலும், தொடர்ந்து மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை மேலும் மோசமானது.

இதையடுத்து அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து குணசேகரன் வீடு திரும்பிய நிலையில் நேற்று அவருக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News