திருச்சிற்றம்பலம் அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி
திருச்சிற்றம்பலம்:
தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் வாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, மகன் ரமேஷ் (வயது 44). இவர் திருச்சிற்றம்பலம் மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு ரமேஷ் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். துறவிக்காடு சாலையில் உள்ள கட்டாச்சிக் குண்டு என்ற இடம் வந்தபோது ஒரு லாரி மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். பலியான ரமேசுக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மல்லிகா கொடுத்த புகாரின், பேரில் திருச்சிற்றம்பலம் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பலியான ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்ட லாரியை கண்டு பிடிக்கும் முயற்சியில் திருச்சிற்றம்பலம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.