செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் மாயம்

Published On 2019-03-25 13:17 GMT   |   Update On 2019-03-25 13:17 GMT
நெல்லை மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது68). இவரது மகள் மகராசி (29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மாப்பிள்ளை பார்த்து வந்தனர். 

இந்த நிலையில் வீட்டில் இருந்த மகராசி கடந்த 23-ந்தேதியன்று திடீரென்று காணவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்க வில்லை. இதுதொடர்பாக சண்முகசுந்தரம் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகராசியை தேடி வருகிறார்கள்.

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை அடுத்த பட்டன்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் சுபலட்சுமி (18). இவருக்கும் பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி முதல் சுபலட்சுமியை காணவில்லை.

இது குறித்து சுந்தர்ராஜ் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபலட்சுமியை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News