search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்கள் மாயம்"

    • சம்பவத்தன்று விடுதியில் இருந்து வெளியே சென்ற இவர்கள் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
    • விடுதியில் வேலை செய்பவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அனுமன் தீர்த்தம் பகுதியை ேசர்ந்தவர் 17 வயது பெண். அதேபோல் பிள்ளையார் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது ெபண்.

    இவர்கள் இருவரும் தருமபுரி மாவட்டத்தில், பட்டுகோணாம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று விடுதியில் இருந்து வெளியே சென்ற இவர்கள் நீண்ட நேரமாகியும் வரவில்லை. விடுதியில் வேலை செய்பவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பாப்பிரெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    • கவுதமி வங்கியில் பணம் போடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி பளூதியூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கவுதமி (வயது19).

    இவர் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று கவுதமி வங்கியில் பணம் போடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.

    இதுகுறித்து முருகன் கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் பென்னா–கரம் சவுளூபட்டியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி கீதா (வயது23). இவர்களுக்கு 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கீதா கடந்த 16-ந் தேதி அன்று எலும்பன்மந்தையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று அங்கிருந்து தனது கணவர் வீட்டிற்கு சென்றுவருவதாக வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் கீதா கணவர் வீட்டிற்கு வரவில்லை. தாய் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை.

    இதனால் பதறிப்போன கீதாவின் தாயார் பாஞ்சாலி பல இடங்களில் தனது மகளை தேடிபார்த்தார். எங்கு தேடியும் கீதா கிடைக்க வில்லை. இகுதறித்து பாஞ்சாலி பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

    • 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய வேதவல்லி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • தாய் ரஞ்சிதா கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகர் இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் வேதவல்லி (வயது 22).

    கடந்த 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய வேதவல்லி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து அவரது தாய் ரஞ்சிதா கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி வி.ஐ.பி. நகர் இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அபிநயா (வயது 21).

    நேற்று வீட்டை விட்டு வெளியேறிய அபிநயா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து அவரது தந்தை ஞானசேகரன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுபா ஆர்.எஸ்.புரத்தை உள்ள அவரது தாயார் வீட்டில் இருந்து வந்தார்.
    • குடும்பத்தினருடன் சேர்ந்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதிப்குமார் (வயது 25). தொழிலாளி. இவரது மனைவி சுபா (24).

    சுபா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். இதனால் அவர் ஆர்.எஸ்.புரத்தை உள்ள அவரது தாயார் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று சுபா வீட்டில் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அதன்பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே பிரதிப்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் குடும்பத்தினருடன் சேர்ந்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதையடுத்து பிரதிப்குமார் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன் (52). இவரது மகள் கார்குழலி (27).

    இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கார் குழலின் கணவர் அஜித்குமார் (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று அஜித்குமார் தனது மூத்த மகனை அழைத்துக் கொண்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை சென்றார்.

    இந்நிலையில் கார்குழலி ஒருவரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடன் கொடுத்தவர் பணத்தை திருப்பி கேட்டு திட்டியதால் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது 2-வது குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு சென்றார்.

    அவரது தந்தை முருகன் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். 

    • போடி அருகே வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண்கள் மாயமாகினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள குன்னூர் ராணா நகரைச் சேர்ந்த ஜெயகாந்தன் மகள் ரஸ்மிதா (வயது 17). இவர் படிப்பு வரவில்லை எனக்கூறி போடியில் உள்ள தனது அக்கா வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மாயமானார். போடி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராஜதானி அருகே உள்ள ஆசாரிப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் மனைவி ஜோதி (22). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று தனது கணவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஜோதி அதன் பின் வீட்டை விட்டு கோபமாக வெளியே சென்றவர் மாயமானார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    ×