search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girls missing"

    • போடி அருகே வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண்கள் மாயமாகினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள குன்னூர் ராணா நகரைச் சேர்ந்த ஜெயகாந்தன் மகள் ரஸ்மிதா (வயது 17). இவர் படிப்பு வரவில்லை எனக்கூறி போடியில் உள்ள தனது அக்கா வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மாயமானார். போடி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராஜதானி அருகே உள்ள ஆசாரிப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் மனைவி ஜோதி (22). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று தனது கணவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஜோதி அதன் பின் வீட்டை விட்டு கோபமாக வெளியே சென்றவர் மாயமானார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    சேலம் அருகே 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    கருப்பூர்:

    சேலத்தை அடுத்த கருப்பூர் தட்டான்சாவடி பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி வெங்கடேஸ்வரி (வயது 28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சேலம் குரங்குசாவடியில் உள்ள ஒரு தனியார் கார்மெண்ட் நிறுவனத்தில் வெங்கடேஸ்வரி வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற அவர் திடீரென மாயமானார்.

    இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரித்த போது அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதும், அவருடன் மாயமானதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோல ஓமலூர் அருகே உள்ள கெட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் கனிராஜ். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 24). கணவரை பிரிந்து செங்கரடு காலனியில் உள்ள பெற்றோர் வீட்டில் ஜெயலெட்சுமி வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஜெயலட்சுமி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×