search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  2 இளம்பெண்கள் மாயம்
    X

    கிருஷ்ணகிரியில் 2 இளம்பெண்கள் மாயம்

    • 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய வேதவல்லி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • தாய் ரஞ்சிதா கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகர் இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் வேதவல்லி (வயது 22).

    கடந்த 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய வேதவல்லி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து அவரது தாய் ரஞ்சிதா கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி வி.ஐ.பி. நகர் இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அபிநயா (வயது 21).

    நேற்று வீட்டை விட்டு வெளியேறிய அபிநயா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து அவரது தந்தை ஞானசேகரன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×