செய்திகள்

சத்தியமங்கலம் அருகே காரில் வந்தவர்களிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல்

Published On 2019-03-21 09:10 GMT   |   Update On 2019-03-21 09:10 GMT
சத்தியமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் காரில் வந்தவர்களிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்தனர். #LSPolls
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சத்தியமங்கலம் அருகே தொப்பம்பாளையம் நால்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி தீனதயாளன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

இதில் ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் 3 பேர் இருந்தனர். கூடலூரில் இருந்து ஈரோட்டில் நடக்கும் மாட்டு சந்தைக்கு இவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களிடம் நடத்திய சோதனையில் பிரதீஸ் குமார் என்பவரிடம் ரூ.60 ஆயிரம், எல்டாஸ்பால் என்பவரிடம் ரூ.52 ஆயிரம் மற்றும் தினேஷ் (31) என்பவரிடம் ரூ.56800 என ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 300-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மாட்டு சந்தைக்கு வந்த வியாபாரிகளான இவர்களிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அந்த பணத்தை சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். #LSPolls

Tags:    

Similar News