search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறக்கும் படையினர்"

    சென்னையில் எம்.எல்.ஏ. -க்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள்  தங்கும்  விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சி.பிளாக் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.

    பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பறக்கும் படையைச்சேர்ந்த 5 அதிகாரிகள் சி பிளாக்கில் உள்ள 10-வது மாடியில் சோதனை நடத்துகின்றனர். தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.  

    சோதனை நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.
    பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தாமரை உருவம் பொறித்த வெள்ளிக்காசுகளை பறிமுதல் செய்தனர். #LSPolls

    பேராவூரணி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதுவரை நடத்திய வாகன சோதனையில் ரூ.2 கோடிக்கும் மேல் பணம் சிக்கியுள்ளது.

    மேலும் முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் கண்காணித்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை நடத்திய வாகன சோதனையில் தாமரை உருவம் பொறித்த வெள்ளிக்காசுகளை பறிமுதல் செய்தனர்.

    பேராவூரணி அடுத்த காரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர் வில்சன் தலைமையில் ஏட்டுகள் பாரதிதாசன், காந்தி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த லாரியின் பின்புறத்தில் பீடி பண்டல்கள் இருந்தது. அதன் நடுவில் ஒரு சிறிய பெட்டி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் தாமரை உருவம் பொறித்த 133 வெள்ளிக்காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி டிரைவரிடம் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் இலங்காபுரி பட்டினத்தை சேர்ந்த சக்திவேல் (33) என்பதும் அவர் பட்டுக்கோட்டையை நோக்கி பீடி பண்டல்களை ஏற்றி வந்ததும் தெரிய வந்தது.

    அவர் கொண்டு வந்த வெள்ளிக்காசுக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்காசுகள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வரப்பட்டதா? தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளதால் பா.ஜனதாவினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கோவை, மேட்டுப்பாளையத்தில் சொகுசு காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.8½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #LSPolls
    கோவை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி கோவை தெற்கு தொகுதியில் பறக்கும்படை அதிகாரி ஷீலா தலைமையிலான குழுவினர் இன்று கோவை காந்திபுரம் ஜி.பி. சிக்கனல் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.7 லட்சத்து 21 ஆயிரத்து 500 இருந்தது. காரில் கோவை சித்ரா பகுதியை சேர்ந்த மனோ (வயது 29) மற்றும் 2 பேர் இருந்தனர்.

    பணம் குறித்து விசாரித்தபோது வியாபாரத்துக்கு பணம் கொண்டு செல்வதாக கூறினார்.

    இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரி அதனை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

    இதேபோன்று சிறுமுகை சத்தி மெயின் ரோடு கூத்தமண்டிபிரிவில் இன்று காலை பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெத்திக்குட்டையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த கேரளாவை சேர்ந்த பென்னி (44) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் குமரேசன், புனிதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். #LSPolls

    சத்தியமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் காரில் வந்தவர்களிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்தனர். #LSPolls
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே தொப்பம்பாளையம் நால்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி தீனதயாளன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் 3 பேர் இருந்தனர். கூடலூரில் இருந்து ஈரோட்டில் நடக்கும் மாட்டு சந்தைக்கு இவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் நடத்திய சோதனையில் பிரதீஸ் குமார் என்பவரிடம் ரூ.60 ஆயிரம், எல்டாஸ்பால் என்பவரிடம் ரூ.52 ஆயிரம் மற்றும் தினேஷ் (31) என்பவரிடம் ரூ.56800 என ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 300-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    மாட்டு சந்தைக்கு வந்த வியாபாரிகளான இவர்களிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அந்த பணத்தை சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். #LSPolls

    அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.6 லட்சம் பணம் மற்றும் 23 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentaryElections
    குளித்தலை:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் பகுதியில் தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கல்லாத்தூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற இரு சக்கர வாகனத்தில் மேலணிகுழியை சேர்ந்த தனியார் நுண்கடன் நிறுவன ஊழியர் மணிகண்டன் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.39 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் அரியலூர்-பெரம்பலூர் சாலை அல்லிநகரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற 23 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.76 ஆயிரம் ஆகும்.

    மேலும் இதே குழுவினர் பேரளி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.57,200 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல கொரப்பாளையம் பிரிவு கரூர்- திருச்சி புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் போலீசார், அதிகாரிகள் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கரூர் இனங்கூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர், கேரள மாநிலம் பையனூரில் வாழைத்தார்களை இறக்கி விட்டு மினி லாரியில் வந்தார். அதில் சோதனையிட்ட போது அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1.32 லட்சம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் திருச்சி சிறு காம்பூரை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் கேரள மாநிலம் கம்மநாட்டுக்கரையில் வாழைத்தார்களை இறக்கி விட்டு மினிலாரியில் திருச்சி முக்கொம்புக்கு திரும்பி கொண்டிருந்தார். அவரது லாரியில் சோதனையிட்ட போது ரூ.1.61 லட்சம் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷானவாஸ் என்பவர் மினி லாரியில் வாழைத்தார்களை ஏற்றுவதற்காக திருச்சி பெட்ட வாய்த்தலைக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். மேலும் அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1.90 லட்சம் எடுத்து வந்தார். அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.4.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தேர்தல் அலுவலரான குளித்தலை கோட்டாட்சியர் லியாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. #ParliamentaryElections
    ×