செய்திகள்

கடன் கொடுத்தவர் வீட்டு முன்பு தீக்குளித்த பெண் பலி

Published On 2019-03-20 10:26 GMT   |   Update On 2019-03-20 10:26 GMT
வடபழனி அருகே கடன் கொடுத்தவர் வீட்டு முன்பு பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போரூர்:

வடபழனி குமரன் காலனியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 55). 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன்களின் திருமணத்திற்காக நெசப்பாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த பூ வியாபாரி திருலோகசுந்தரியிடம் ரூ.1 லட்சம் பணம் மற்றும் ஒரு பவுன் நகை கடனாக வாங்கினார்.

கடன் பிரச்சினையால் தவித்து வந்த கோவிந்தம்மாள் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. திருலோகசுந்தரி தொடர்ந்து பணத்தை கேட்டு வந்ததால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தம்மாள் நேற்று அதிகாலை நெசப்பாக்கத்தில் உள்ள திருலோகசுந்தரியின் வீட்டிற்கு சென்ற கோவிந்தம்மாள் திடீரென மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

இதில் படுகாயமடைந்த கோவிந்தம்மாளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கோவிந்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News