செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே புளியமரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

Published On 2019-03-19 14:28 GMT   |   Update On 2019-03-19 14:28 GMT
சிங்காரப்பேட்டை அருகே கட்டுபாட்டை இழந்த லாரி சாலையோர புளிய மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் பலியானார்.
ஊத்தங்கரை:

விழுப்புரத்தில் இருந்து சவுக்கு மரம் லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று பெங்களூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விழுப்புரம் மாவட்டம், தேனிப்பட்டியை சேர்ந்த தமிழ் வாணன் (வயது34) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்றிரவு கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்துள்ள ஆண்டியூர் பகுதியில் சென்ற போது லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்வாணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான தமிழ்வாணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News