செய்திகள்
கும்பகோணம் அருகே கஞ்சா விற்ற பெண் கைது
கும்பகோணம் அருகே கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே வளையபேட்டை யானையடி பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 45).
இவர் அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த தாலுகா போலீசார், மாரியம்மாளிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே மாரியம்மாளை கைது செய்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் கஞ்சாவை மறைத்திருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கும்பகோணம் அருகே வளையபேட்டை யானையடி பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 45).
இவர் அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த தாலுகா போலீசார், மாரியம்மாளிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே மாரியம்மாளை கைது செய்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் கஞ்சாவை மறைத்திருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.