செய்திகள்

கொடைக்கானலில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி பெண்கள் பேரணி

Published On 2019-03-09 11:50 GMT   |   Update On 2019-03-09 11:50 GMT
கொடைக்கானலில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி பெண்கள் அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோடை குறிஞ்சி பெண்கள் அமைப்பு சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து டாக்டர் சிவந்திஆதித்தினார் திருமணமண்டபம் வரை பெண்கள் அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.

அதன் பின் கருத்தரங்கம் நடைபெற்றது. பூம்பாறை கிராம நிர்வாக அலுவலர் செல்வராணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கருத்தரங்கில் மகளிர் தினம் எப்படி உருவானது எப்போது அறிவிக்கப்பட்டது என்பது குறித்த விளக்கத்தை பெண்களுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் பெண்களை காட்சி பொருளை பார்க்காமல் பெண்களை ஆண்கள் மதிக்கவேண்டும்.பெண்கள் வீட்டில் டிவி நாடகங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் பெண்களை மதிக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.மதுவினால் குடும்பப் பெண்கள் அதிகமான இடையூறுகளை சந்திப்பதால் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று இந்நாளில் கோரிக்கை வைப்பதாகக் கூறிப் பேசினர். நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்பினர் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News