செய்திகள்
கோப்புப்படம்

மதுரை மாவட்டத்தில் 38,541 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

Published On 2019-03-01 10:32 GMT   |   Update On 2019-03-01 10:32 GMT
மதுரை மாவட்டத்தில் இன்று 38 ஆயிரத்து 541 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். 114 மையங்களில் தேர்வு நடந்தது. #PublicExam
மதுரை:

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 4 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 461 மாணவர்களும், 20 ஆயிரத்து 80 மாணவிகளும் என மொத்தம் 38 ஆயிரத்து 541 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். 114 மையங்களில் தேர்வு நடந்தது.

தேர்வு நடைபெறும் மையங்களில் முறைகேடு நடைபெறாமல் தடுக்கும் வகையில் கல்வி மாவட்ட வாரியாக பறக்கும் படைகள், ஆய்வுக்குழுக்கள், சிறப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் இன்று தேர்வு மையங்களுக்குச் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
 
மதுரை சிறையில் இன்று 8 கைதிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். #PublicExam

Tags:    

Similar News