பூங்கா நகர் ரெயில் நிலையம் அருகே மாணவரை கத்தியால் குத்தி செயின் பறிப்பு
சென்னை:
சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அபினேஷ். அண்ணா பல்கலைக் கழகத்தில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு கோட்டூர்புரம் செல்வதற்காக பூங்காநகர் ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்றார்.
தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தபோது 3 பேர் அபினேசை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது முகத்தில் வெட்டு விழுந்தது. இதனால் வலிதாங்க முடியாமல் அலறி துடித்த அபினேசிடம் இருந்த செல்போனை 3 பேரும் பறித்தனர்.
பின்னர் அவரிடம் பணம் எவ்வளவு வைத்திருக்கிறாய் என்று கேட்டனர். இதற்கு 330 ரூபாய் மட்டுமே உள்ளது என்று அபினேஷ் கூறியுள்ளார். அந்த பணத்தையும் கொள்ளையர்கள் பறித்தனர். பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டனர்.
பின்னர் அபினேஷ் சென்னை ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.